நம்மிடம் காலில் விழுந்து வணங்குவதும், ஆசீர்வாதம் வாங்குவதும் ஒரு வழக்க மாக இருந்துவருகிறது என்பது நமக்கு தெரியும். இதன் பின்னணி என்னவென்றால், நாம் விழுந்து வணங்கும் நபரின் கால் என்பது அவரின் உடலில் மதிப்பு குறைவான இடம், அதற்கே நான் தலை வணங்குகிறேன் என்றால் என் பணிவு அப்படிப்பட்டது. அல்லது என்னை அந்தளவுக்கு தாழ்த்திக்கொள்கிறேன் என்பது தான் அதன் அர்த்தம். ஆக நம்முடைய வழக்கம் என்னவென்றால், கால் என்பது நமது உடலின் கீழ்த்தரமான பகுதி என்பது தான். என் கால் தூசிக்கு சமமா? என் காலில் வந்து விழ வைக்கிறேன் என்பதெல்லாம் காலைப்பற்றி உயர்வாக பேசுவதாக நாம் நினைத்துவிடக்கூடாது. மோசமான என் காலுக்கு நீ ஈடாகுமா அல்லது என் உடலிலேயே மோசமான பகுதி கால் அதில் வந்து உன்னை சரண்புக வைக்கிறேன் என்பது தான் அர்த்தம்.
இதே தொனியில் தான் நாம் தெய்வகாரியமாக செய்யும் செயல்களை தெய்வத்தின் திருவடியில் சேர்க்கிறேன், அல்லது சமர்ப்பிக்கிறேன் என்று சொல்கிறோம். ஆக அங்கேயும் நாம் தெய்வத்தின் திருவடி தெய்வத்தின் மற்ற அங்கங்களில் இருந்து குறைவானது என்ற அர்த்தத்தில் தான் சொல்கிறோம்.
ஆனால், பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடலில் எது உயர்த்தது எது தாழ்ந்தது. உடலில் உறையும் ஆன்மா எல்லா இடத்திலும் நிரைந்திருக்கிறது. ஆகவே பேதத்தை நம் உடலிலுமா பார்க்க வேண்டும். நாம் நமது உடலை சமமாக பார்த்தால்தானே உலகில் உள்ள அனைத்தையும் சமமாக பார்க்க முடியும்.
இதே தொனியில் தான் நாம் தெய்வகாரியமாக செய்யும் செயல்களை தெய்வத்தின் திருவடியில் சேர்க்கிறேன், அல்லது சமர்ப்பிக்கிறேன் என்று சொல்கிறோம். ஆக அங்கேயும் நாம் தெய்வத்தின் திருவடி தெய்வத்தின் மற்ற அங்கங்களில் இருந்து குறைவானது என்ற அர்த்தத்தில் தான் சொல்கிறோம்.
ஆனால், பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடலில் எது உயர்த்தது எது தாழ்ந்தது. உடலில் உறையும் ஆன்மா எல்லா இடத்திலும் நிரைந்திருக்கிறது. ஆகவே பேதத்தை நம் உடலிலுமா பார்க்க வேண்டும். நாம் நமது உடலை சமமாக பார்த்தால்தானே உலகில் உள்ள அனைத்தையும் சமமாக பார்க்க முடியும்.
No comments:
Post a Comment